
தமிழக அரசு தற்போது வழங்கப்பட்டு வரும் மாற்று திறனாளி மாணவர்களின் உதவித்தொகையை அதிகரித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி உதவித்தொகை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
1. 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரத்தில் இருந்து 2000 ஆக உதவி தொகை வழங்கப்படும்.
2. 6 முதல் 8-ம் வரையிலான மாணவர்களுக்கு ரூபாய் 3000 -திலிருந்து 6000 உதவித்தொகை வழங்கப்படும்.
3. 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூபாய் நாலாயிரத்தில் இருந்து 8000 ஆக உதவித்தொகை வழங்கப்படும்.
4. பட்டப்படிப்பு பயலும் மாணவர்களுக்கு ரூபாய் 6000 இல் இருந்து 8000 ஆக உதவித்தொகை வழங்கப்படும்.
5. தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபாய்7,000 இல் இருந்து 14,000 ஆக உதவித்தொகை வழங்கப்படும்.