
திண்டுக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர்.
அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமியின் தாய் தந்தை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது அந்த சிறுமியின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியின் தந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.