
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காவு விளைப்பகுதியில் அனீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிஜூ என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதன்படி குற்றவாளிகள் இருவருக்கும் தலா 23 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் இருவருக்கும் 1.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.