
ஃபேஸ்புக்கில் 12-ம் வகுப்பு மாணவனுடன் பழகி காதலித்து, கணவர் மற்றும் 4 வயது குழந்தையை விட்டுவிட்டு காதலனுடன் ஓடிய ஒரு திருமணமான பெண், சில மாதங்களில் காதலனால் கைவிடப்பட்டார்.
அந்த பெண்ணின் கணவர் கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்தார். அவர் வீட்டில் இல்லாத நேரம் இளம்பெண் சோசியல் மீடியா மூலம் 13- ஆம் வகுப்பு மாணவனுடன் பழகி காதலித்து 4 வயது குழந்தையை விட்டுவிட்டு ஓடிவிட்டார். தற்போது ஒரு சில மாதங்களில் காதலன் கைவிட்டதால் அந்த பெண் மீண்டும் தனது கணவரிடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்கு வர முயன்றார்.
சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோவில் அந்த பெண் அழுது கொண்டே கணவரிடம் மன்னிப்பு கேட்டு காலில் விழுகிறார். அந்த பெண்ணின் கணவர் உறுதியாக மறந்து போவேன். ஆனால் உன்னை ஏற்க மாட்டேன் என கூறும் காட்சி இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.
This woman abandoned her husband and kids for an unemployed 12th-grade boy she met on Facebook. Now that the boy has left her, she’s desperate to come back to her family
pic.twitter.com/ZupHL62kXY— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 23, 2025
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பெரும்பாலும் கணவரின் முடிவை ஆதரித்து, “மனைவி உறவையும் குழந்தையையும் துரத்தியவர் மீண்டும் மரியாதைக்கு தகுதியற்றவர்” எனக் கருத்து தெரிவித்துள்ளனர். நம்பிக்கையற்ற உறவுகள் மீண்டும் இணைவது சாத்தியமா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள், திருமண உறவின் புனிதத்தன்மை மற்றும் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை மீண்டும் நமக்கு நினைவூட்டுகின்றன.