பெங்களூருவில் ஐபிஎல் 2025 வெற்றியையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றி விழா நடத்தியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னசாமி மைதானத்துக்குள் டிக்கெட் உள்ளரங்க நிகழ்வாக இருந்தாலும், வெளியே சுமார் 2.5 லட்சம் ரசிகர்கள் திரண்டதால், கட்டுப்பாட்டை இழந்த கூட்டம் நெரிசலை உருவாக்கியது. இதில் 13 முதல் 35 வயதுடைய இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் 11 ரசிகர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.