
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தினமும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனை தடுக்க அரசு பல புதிய சட்டங்களை இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் பல்லியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அதனை நண்பர்கள் மூலமாக வீடியோவும் எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த மாதம் ஆறாம் தேதி நடந்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உடனே போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரியின் அடிப்படையில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.