தமிழகத்தில் தபால் நிலையங்களில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்ன, காலி பணியிடங்களின் விவரங்கள், எப்படி விண்ணப்பிப்பது என்பதை குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் தபால் அலுவலங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் மட்டுமே போதும். இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இருப்பினும் எஸ்சி/எஸ்டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. தபால் அலுவலர் 12 ஆயிரம் முதல் 29,380 வரை சம்பளமாக வழங்கப்படும். உதவி தபால் அலுவலர் பத்தாயிரம் முதல் 24 ஆயிரத்து 470 சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும்.