11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியின் உசைன் போல்ட் மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சேர்மன் எம்.வி முத்துராமலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர் எம் ரவி கூறியதாவது, அனைவருக்கும் யோகா தின வாழ்த்துக்கள். யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் நலத்தையும், மனநலத்தையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முடியும் என கூறியுள்ளார். யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி 50 தண்டால் எடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.