தமிழக அரசு தொடக்க, நடுநிலை கல்வி மாணவர்கள் இடையே கற்றல் திறன் மற்றும் வாசிப்பு திறன் போன்ற அடிப்படைத் திறன்களை மேம்படுத்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் உள்ள 4557 அரசு பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் அடிப்படை திறன்களை வெளிக்கொண்டு வர 100 நாள் ஓப்பன் சேலஞ்ச் அதாவது வெளிப்படை சவால் என்ற முறைக்கு தயாராக அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி தொடக்க, நடுநிலை கல்வி மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் திறன், அடிப்படை கணக்கு திறனான கூட்டல்,கழித்தல், பெருக்கல். வகுத்தல் ஆகியவற்றை 100 நாட்களில் மேம்படுத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு சார்பில் இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம் ஒவ்வொரு மாவட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தொடக்கக் கல்வி இயக்குனரகம் சார்பில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.