
அரியலூர் வடக்கு திரவபதியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ராஜீவ் காந்தி என்பவர் ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவர் அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் மறுநாள் மதிய உணவு இடைவேளை முடிந்தபின் மாணவியிடம் தனது டிபன் பாக்ஸை ஆசிரியர் அறையில் வைக்குமாறு ராஜீவ் காந்தி கொடுத்துள்ளார். இதனை அடுத்து மாணவி அதனை பெற்று சென்ற நிலையில் பின்னாலேயே தொடர்ந்து சென்ற ராஜீவ் காந்தி ஆசிரியர் அறையில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாது இது குறித்து யாரிடமாவது கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்த மாணவி நடந்தவை பற்றி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் மாணவியின் நெஞ்சு பகுதியில் காயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த மாணவி தன்னிடம் ஆசிரியர் அத்துமீறி நடந்து கொண்டது குறித்தும், பாலியல் பலாத்காரம் செய்தது குறித்தும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரியின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது பற்றி தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.