மிசோரம்மில் உள்ள லாங்ட்லாயில் ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் செய்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அதாவது அவரது ஆட்டோவில் மியான்மரை சேர்ந்த வியாபாரி ஒருவர் ரூபாய் 17 லட்ச பணத்துடன் ஏறியுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் ஆட்டோவில் பயணித்த அந்த வியாபாரி ஒரு பாலித்தீன் பையில் ரூபாய் 17 லட்சத்தை கொண்டு வந்துள்ளார்.

பின்னர் அவர் இறங்க வேண்டிய ஹோட்டல் வந்ததும் தவறுதலாக பணப்பையை மறந்து ஆட்டோவில் வைத்துவிட்டு ஹோட்டலுக்கு சென்று உள்ளார். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் லால்மிங்முனா பணத்துடன் ஆட்டோவில் அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் சிறிது தூரம் சென்றபின் ஆட்டோவில் பணம் இருப்பதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுனர்.

அதனை அந்த வியாபாரி இறங்கிய ஹோட்டலுக்கு மீண்டும் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார். அதனை வாங்கிய வியாபாரி அந்தப் பையில் இருந்த பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்ததற்காக ஏதாவது வெகுமதி வாங்கிக்கோங்க எனக் கூறியுள்ளார் .

ஆனால் ஆட்டோ டிரைவரோ வேண்டாம் என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் லால்மிங்கமுனாவை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர் சங்கம் தலைவர் சி. ஜாதிங்கா லால்மின் முனாவின் நேர்மையை பாராட்டியுள்ளார்.