
விழுப்புரம், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹோட்டலில் காலை சிலர், உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒருவருடைய இலையில் ஊற்றிய சாம்பாரில் பல்லி கிடந்துள்ளது. இதை பார்க்காமல் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து சிலர் லேசான மயக்கம் ஏற்படுவதாகவும், வாந்தி வருவதாகவும் கூறினர். உடனே ஊழியர்கள் அவர்கள் மூன்று பேரையும் ஆட்டோ மூலமாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.