மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்ற தொழிலதிபரை அவரது மனைவி சோனம் மேகலயாவில் உள்ள ஷில்லாங் பகுதிக்கு ஹனிமூனுக்கு அழைத்துச் சென்று கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் தாக்கமே அடங்காத நிலையில் மீண்டும் மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால் இந்த முறை உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

அதாவது மௌசம்பூர் இஸ்லாம் நகர் பகுதியில் சுனில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குஷ்பூ என்ற இளம் பெண்ணுடன் கடந்த மாதம் 17ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மறுநாள் சுனில் தன்னுடைய மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் 9 நாட்கள் குஷ்பூ தன் கணவன் வீட்டில் இருந்த நிலையில் பின்னர் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதாவது சடங்கு படி மணமகளை அவரது தாயார் வீட்டில் விட்டுள்ளனர்.

இந்நிலையில் சுனில் ஹனிமூன் செல்வதற்கு தயாரான நிலையில் குஷ்பூ அவரது தாய் வீட்டில் 10 நாட்களாக இருந்த நிலையில் திடீரென காணாமல் போய்விட்டார். அதாவது அவரது மனைவி காதலனுடன் ஓடிப் போய்விட்ட நிலையில் இந்த தகவல் சுனிலுக்கு தெரிவிக்கப்பட்டது. குஷ்பூ காணாமல் போனதை கடந்த 10-ம் தேதி தான் அவரது குடும்பத்தினர் சுனிலுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சுனில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து குஷ்பூ மற்றும் அவரது காதலனை தேடி வந்த நிலையில் ஒரு பெண் புர்கா அணிந்துவிட்டு சந்தேகப்படும்படியாக சென்றுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை நடத்தியதில் அது குஷ்பூ என்பது தெரிய வந்தது.

பின்னர் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் ஒன்றுகூடி தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அவரவர் பொருட்களை திருப்பி ஒப்படைத்துள்ளனர். இதில் குஷ்பூ தன்னுடைய காதலனுடன் வாழ விருப்பம் தெரிவித்ததால் சுனிலும் மகிழ்ச்சியாக அவரது காதலனுடன் செல்லட்டும் என அனுப்பி வைத்துவிட்டார். மேலும் இது பற்றி அவர் கூறும் போது நல்ல வேலை எனக்கு ராஜா ரகுவன்சி போன்ற நிலை வரவில்லை. அதுவரையில் எனக்கு மகிழ்ச்சி என்று கூறினார்.