திருவாரூர் மாவட்டம் விளம்பர தெற்கு வீதியைச் சேர்ந்தவர் நவீன் ராஜ்(17). இவர் திருவாரூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார். நேற்று முன்தினம் நவீன் ராஜ் தனது நண்பரான பிரகாஷ்ராஜ்(17) என்பவருடன் கடைத்தெருவுக்கு ஸ்கூட்டியில் சென்றுள்ளார்.

காரைக்காலில் இருந்து மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றி சென்ற லாரிக்கு வழி விடுவதற்காக நவீன் ராஜ் சாலை ஓரமாக ஒதுங்க முயன்றார். அப்போது நவீன் ராஜும், பிரகாஷ்ராஜும் நிலைதடுமாறி ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தனர்.

அந்த சமயம் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி சக்கரம் ஏறி இறங்கியதால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.