உத்திர பிரதேச மாநிலம் பிருந்தாவன் வங்கி பிகாரி கோவில் ராதாகிருஷ்ணன் மூலவராக உள்ளார். தினமும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் அபிஷேக் அகர்வால் என்பவர் தனது குடும்பத்துடன் கடந்த வியாழக்கிழமை சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார்.

சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த பொது திடீரென வந்த குரங்கு அபிஷேக் மனைவியின் கையில் இருந்த பையை பிடித்து கொண்டு ஓடியது. அந்த பையில் வைர நெக்லஸ் உட்பட 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் இருந்ததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் வந்து குரங்கை தேட முயற்சி செய்தனர். ஆனால் அந்த குரங்கு எங்கோ சென்று விட்டதால் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஒரு குழுவினர் குரங்கு சென்ற பகுதிகளில் தேட ஆரம்பித்தனர். தொடர்ந்து 8 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்த கைப்பை ஒரு புதரில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் அந்த பையை மீட்டு அபிஷேக்கிடம் ஒப்படைத்தனர். இதேபோல கடந்த 2015-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமிருந்து கைப்பையை பறித்த குரங்கு அதிலிருந்து 1.5 லட்சம் பணத்தை பக்தர்கள் மீது கொட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.