
டெல்லியில் உள்ள தயார்பூர் என்ற பகுதியில் சோனு (40) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அந்த தகவலின் படி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் காவல் துறையினர் அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதாவது சோனு ஓட்டுனராக வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது அவருக்கு வேலை இல்லை. இதனால் அவர் போதைக்கு அடிமையாகி விட்ட நிலையில் அடிக்கடி தன்னுடைய தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதேபோன்று தன் தாயிடம் சம்பவ நாளில் சோனு பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில் சோனு தன் தாயை கொலை செய்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சோனு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.