
திருத்தணியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விமல் ராஜ்(28) நாகவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
தினமும் விமல் ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் திருத்தணியில் இருந்து வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று காலை விமல் ராஜ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பருத்திபுத்தூரில் சுகாதார பணியாளர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது விமல் ராஜ் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.