
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி கங்கையில் நீராடியது கவனம் ஈர்த்தது. இது குறித்த பேசிய அவர், தான் கங்கை மாதாவின் தத்துப்பிள்ளை என்றார். தன்னுடைய தாயாரின் மறைவுக்குப் பின்னர், கங்கை மாதா தனக்கு நெருக்கமாக இருப்பதாக கூறிய அவர், கங்கை ஆறு ஒரு தாயைப் போல அனைவரையும் காப்பதாக உணர்ச்சிவயப்பட்டு பேசினார். கங்கை தன்னை வலுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.