உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாலையோரத்தில் காத்திருந்த இளைஞனை மோதி தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து கடந்த மாதம் நண்ட்கிராம் பகுதியில் உள்ள VVIP மால் அருகே  நடந்துள்ளது. இந்த சமத்துவம் அங்கிருந்த  CCTV கேமராவில் பதிவாகியுள்ள நிலையில்  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், அந்த இளைஞன் சாலையில் நிற்கும்போது, வேகமாக வந்த பைக் நேரடியாக மோதும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த பைக்கை ஓட்டியவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பைக் வேகமாக மோதியதில் வாலிபர் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டதோடு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு அருகில் இருந்தவர்கள் வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.