
உத்தரகாண்ட் மற்றும் உத்தர் பிரதேச மாநிலங்களில் கன மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர் பிரதேசம் நஜீபாபாத்திலிருந்து ஹரிதுவாருக்கு பயணிகள் பேருந்து ஒன்று 25 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. ஆனால் பேருந்து பிஜ்னூர் கோட்வாலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.
இதனால் பேருந்து உள்ளே இருந்த பயணிகள் உதவி கேட்டு அலறியும் சிலர் ஜன்னல் வழியாகவும் தப்பவும் முயற்சித்துள்ளனர். இதையடுத்து வெள்ளத்தில் பேருந்து அடித்து செல்லாமல் இருக்க ஜேசிபி மூலமாக பேருந்தை தடுத்து நிறுத்தி பயணிகளை காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
Bus with 25 passengers stuck in water flow in Mandawali region of UP's Bijnor due to sudden rise in water levels in Kotawali seasonal river on Hardiwar-Bijnor road. Efforts on to prevent overturning of the vehicle using a crane.pic.twitter.com/FVDZKf868B
— Waquar Hasan (@WaqarHasan1231) July 22, 2023