
மத்திய, மாநில அரசுகள் நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு பிரபல ஓய்வூதிய திட்டமான பிரதான் மந்திரி ஷ்ராம் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் மாதம் 55 ரூபாய் செலுத்தினால் ஓய்வூதியதாரர்கள் 60 வயதில் இருந்து மாதந்தோறும் ஓய்வூதியமாக 3000 ரூபாய் பெறலாம்.
பிரதமர் மோடி அவர்களால் இந்த திட்டம் 2019 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக விண்ணப்பதாரர்கள் துப்புரவு பணியாளர்கள், சலவை செய்பவர்கள், செங்கல் சூளைகளில் வேலை செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் https://eshram.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.