
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில் 9 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தவில்லை என இந்திய அரசு குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் விளக்கம் கொடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குர்ஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
இந்த பேட்டியின் போது வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி பகல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருக்கிறது என்று கூறினார். இதை தொடர்ந்து பேசிய கர்னல் சோபியா குர்ஷி, ஆப்ரேஷன் சிந்தூர் நேற்று நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. 9 தீவிரவாத முகாம்கள் தாக்கப்பட்டது. நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இந்த முகாம்கள் கண்டறியப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.