
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சாகர் கிராமத்தில் யாசீர் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு ரோகித் (25) என்ற நண்பர் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரோகித் இடமிருந்து யாசீர் 500 ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
ஆனால் அந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக யாசீர் ரோகித்திடம் தன்னுடைய பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். பணத்தை தருவதாக கூறிய ரோகித் கொடுக்காமல் இழுத்தடித்த நிலையில் இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் அடிக்கடி நடந்தது.
இந்நிலையில் சம்பவ நாளில் ஒரு அங்கன்வாடி மையத்தில் அமர்ந்து ரோகித் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற யாசீர் தன்னுடைய பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதில் கோபம் அடைந்த ரோகித் கத்தியால் யாசீரை சரமாரியாக குத்தினார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று யாசீர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரோகித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.