தெலுங்கானா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் ஹேமந்த் மகாலட்சுமி தம்பதி. மகாலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் ஹேமந்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமியின் குடும்பத்தினருக்கு அவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் தொலைபேசியில் அழைத்து வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த குடும்பத்தினர் மற்றும் போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு 30 துண்டுகளாக வெட்டப்பட்டு அவர் வீட்டில் இருந்த பிரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.