
டெல்லியில் உள்ள சத்யம் என்க்லேவ் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதை பார்த்து அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது ஒரு பெட்டி வித்தியாசமாக இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட வீட்டில் ஆய்வு நடத்தினர்.
அப்போது அந்த வீட்டுக்குள் இருந்த பெட்டியில் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது தெரியவந்தது. சுமார் 50 முதல் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக இருந்த நிலையில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அந்த பெண் யார் என்று அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு குற்றவாளியையும் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
#WATCH | Delhi: A dead body of a woman was found inside the bed-box in a house in Shahdara’s Vivek Vihar
(Earlier visuals from the spot) https://t.co/pC4GMwt2La pic.twitter.com/MlpHZpj21E
— ANI (@ANI) March 28, 2025