
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பெரியசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் ஆபிரகாம் (42). இவர் விவசாயம் செய்து வந்தார். நேற்று இரவு ஆபிரகாம் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது திடீரென ஒரு மர்ம கும்பல் அரிவாளால் ஆபிரகாமை சரமாரியாக தாக்கினர். அதில் ஆபிரகாம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆப்ரகாம் குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆபிரகாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் கொலை செய்தவர்களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என ஆபிரகாம் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்