தமிழகம் முழுவதும் வீடுகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி பேனல்கள் அமைக்கப்படுவது அதிகமாகிவிட்டது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் உரிமையாளர் பயன்படுத்தியது போக மீதியை மின்வாரியத்திற்கு கொடுக்கலாம்.
அதாவது வீட்டில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வோர், அதன் உபரியை மின் வாரியத்திற்கு வழங்கலாம்.

அதேபோல, இரவு நேரங்களில் சூரிய ஒளி இல்லாதபோது மின் வாரியத்திடம் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம். இதனை கணக்கிட Bi-Directional மின் மீட்டர் பொருத்தப்படுகிறது. அதற்கான கட்டணத்தை ரூ.2,764ஆக நிர்ணயித்துள்ளது மின் வாரியம். மும்முனை இணைப்புக்கு ₹5,011 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.