
சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வரும் 13 வினாடி வீடியோ ஒன்று நெட்டிசன்களிடம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்த ஒரு சிறுவன் தரையில் அமர்ந்திருக்க, அவனின் முன்பாக ஒரு பெரிய நாகப்பாம்பு இருப்பது காணப்படுகிறது. குழந்தையின் அருகில் பாம்பு இருப்பது மட்டும் போதாதென்று, அந்த சிறுவன் பாம்பை வாயால் கடிக்க முயற்சிப்பது புகைப்படக்காட்சியாக பதிவாகியுள்ளது.
வீடியோவில் சிறுவன், பாம்பை விழுங்கவது போன்று மூன்று முறை முயற்சி செய்கிறார். பாம்பு ஒவ்வொரு முறையும் திடீரென பின்வாங்கி தப்பிக்கிறது. அதிர்ச்சியூட்டும் இந்த காணொளி ‘Jesac C Eden Real’ என்ற பேஸ்புக் பயனரால் பகிரப்பட்டு, “பாம்பு ஆபத்தில் உள்ளது” என்ற தலைப்பில் பதிவிடப்பட்டது. ஆனால், இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “ஆபத்தில் இருப்பது பாம்பு அல்ல – அந்தக் குழந்தைதான்!” என கூறி, கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் ஒரு குழந்தை எப்படி இருக்க முடிகிறது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். “இதுபோன்ற விஷப் பாம்புகளுடன் குழந்தைகளை விளையாட விட்டுவைப்பது பொறுப்பற்ற நடவடிக்கையாகும்” என மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாம்பு தாக்கவில்லை என்பதே இனிமை எனினும், இது எதிர்காலத்தில் தவறான முடிவுகளை ஏற்படுத்தக்கூடியது என்ற கருத்தும் பரவலாக விவாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வரும் நிலையில், குழந்தைகள் பாதுகாப்பும், பாம்புகள் போன்ற காட்டுயிர்களுடன் நடத்தை விதிகளும் மீண்டும் பேசப்படத் தொடங்கியுள்ளது. மேலும் இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளை தவிர்க்க பெற்றோர்களும், சமூகத்தையும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.
https://www.facebook.com/reel/523450370644616/?t=1