
பராமரிப்பு பணியின் காரணமாக, விழுப்புரம்- திருப்பதி ரயில் சேவை ஜுன் 1 முதல் 30 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும், அந்த ரயில் காட்பாடியோடு நிறுத்தப்படுகிறது.
மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில், இனி காட்பாடியில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் என தென்மத்திய ரயில்வே குறிப்பிட்டுள்ளது.