
மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2-ல் உள்ள கழிவறை குப்பை தொட்டியில் பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. (நேற்று) மார்ச் 25-ஆம் தேதி மாலை 10:30 மணியளவில் கழிவறையில் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையின் சடலத்தை கழிவறை தொட்டியில் போட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .