
மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் சர்வதேச சரக்கு பிரிவில் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கும் கட்டிடம் ஒன்று உள்ளது. அங்கு திடீரென நேற்று காலை 10.40 மணி அளவில் சி.ஐ.எஸ்.எப் படையை சேர்ந்த கான்ஸ்டபிள் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த விமான நிலைய அதிகாரிகள் விரைவாக சென்று வீரரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சி.ஐ.எஸ்.எப் கான்ஸ்டபிள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த எந்த விவரமும் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.