பெங்களூருவில் இருந்து சென்ற ஏர் இந்த விமானத்தில் பயணித்த மதுரஸ் பால் என்ற   பத்திரிக்கையாளர் தனக்கு விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஏர் இந்தியாவில்  வழங்கப்பட்ட அத்திப்பழச் சாட் உணவில் பிளேடு கிடந்தது கவனிக்காமல் வாயில் போட்டு மென்று சாப்பிட்ட பிறகு தான் அது உணவில் இருப்பதை உணர்ந்தேன். அதை துப்பிய பொழுது பிளேடு என்பது தெரிய வந்தது.

இதற்காக விமான பணிப்பெண் மன்னிப்பு கேட்டதோடு கொண்டக்கடலை வழங்கினார். எந்த விமானத்தில் வழங்கப்படும் உணவில் பிளேடு இருந்தாலும் அது ஆபத்துதான் சாப்பிட்டால் நாக்கை வெட்டிவிடும். இந்த உணவை ஒரு குழந்தை சாப்பிட்டால் என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. உணவில் கிடந்த பிளேடு சமையல் பார்ட்னர் காய்களை வெட்டுவதற்கு பயன்படுத்தும் இயந்திரத்தின் பாகம். இனி இது போன்ற நடப்பதை தவிர்க்கும் விதமாக பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு  பணியாற்றி வருகிறோம் என்று கூறியுள்ளார்.