பிரபல மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ஷைன் டாம் தனது குடும்பத்துடன் காரில் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பறையூர் அருகே சென்ற போது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஷைன் டாமின் தந்தை சி.பி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த ஷைன் டாம், அவரது தாய் மரியா சகோதரர் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதன்பிறகு அவர்கள் திருச்சூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய மந்திரியும், நடிகருமான சுரேஷ்கோபி ஷைன் டாமை நேரில் பார்த்து ஆறுதல் கூறியுள்ளார்.