
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அதேபோன்று திருமண நிகழ்ச்சிகளில் நடைபெறும் வித்தியாசமான வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது ஒரு இளம் ஜோடிக்கு திருமணமான நிலையில் மேடையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது இரு பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தபோது மணப்பெண்ணின் கைகளை பிடித்து அவர்கள் அந்த நடனமாட அழைத்தனர்.
அந்தப் பெண் தன்னை மறந்து உற்சாகமாக நடனமாடிய நிலையில் அவர் ஆடிக்கொண்டே மேடையை வீட்டு கீழே இறங்கும்படி சென்றார். இதை பார்த்த மணமகன் பயந்து போய் மணமகளின் பின்னால் ஓடி அவரை அப்படியே பிடித்து வந்து தன் பக்கத்தில் உட்கார வைத்து கடிந்து கொண்டார். அந்தப் பெண் ஓடி விடுவாரோ என்ற பயத்தில் அவர் பின்னால் சென்று அவரை தரதரவென இழுத்து வந்து மீண்டும் அருகில் உட்கார வைத்தார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
बस इसी डर की वजह से आज तक शादी नहीं
कर रहा था बीवी तो धमाल है 😂😂🤣🤣 pic.twitter.com/lzfr4tHdK5— Pratima Saran (@Preeti_074) June 15, 2025