தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தமிழகம் முழுவதும் உள்ள நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். அதாவது 60 மாவட்டங்களாக பிரிந்து நற்பணி இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில் இதில் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்த பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் நடிகர் விஜய்யை போல சூர்யாவும் அரசியலுக்கு வர தன்னுடைய அடித்தளத்தை போட்டு வைக்கிறாரா என மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.