
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் சிபிசிஐடிக்கு பா.ஜ.க எம்.பி செல்வகணபதி கடிதம் அனுப்பியுள்ளார். முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது. எனவே விசாரணைக்கு ஆஜராக மூன்று மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும். தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி இருந்த நிலையில், சிபிசிஐடிக்கு எம்.பி செல்வகணபதி கடிதம் அனுப்பியுள்ளார்.