
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆவியூர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தார். மாணவி பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஆகாஷ் என்பவர் சரக்கு வாகனத்தில் பள்ளியில் விடுவதாக கூறி மாணவியை ஏற்றி சென்றார்.
அதன் பிறகு அத்திப்பாக்கம் காப்பு காட்டுப்பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். இதனால் அச்சத்தில் மாணவி யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அந்த மாணவிக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்தது. பின்னர் விசாரித்த போது மாணவி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.