
ஹரியானா மாநிலம் கர்ணாலில் உள்ள செக்டர் 6 குருத்வாரா அருகே செவ்வாய்க்கிழமை இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் விக்கி விபத்தில் சிக்கினார். அவர் சாலையில் விழுந்து வாந்தி எடுத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மயங்கி கிடந்தார். அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், அவர் இறந்துவிட்டதாக கருதி, சுமார் 10 நிமிடங்களாக யாரும் எதுவும் செய்யாமல் நின்றனர்.
அப்போது, தனது குழந்தைக்காக ஐஸ்கிரீம் வாங்கச் சென்ற அங்கிதா மான் என்ற நர்சிங் மேற்பார்வையாளர் அங்கு வந்தார். அவர் அந்த இளைஞரின் நாடி துடிப்பை (pulse) சரிபார்த்தபோது, இன்னும் உயிர் இருக்கிறது என்பதை உணர்ந்தார்.
#socialmedia
Real life heroine, सड़क पर CPR देकर बचाई जान | वीडियो वायरल #Haryana #Karnal #ViralVideo #CPR pic.twitter.com/KbK0tkWeG4— लक्ष्मी यादव (@__laxmi_yadav) May 22, 2025
உடனடியாக சாலையிலேயே CPR (முன்னேற்பாட்டு உயிர்காக்கும் செயல்) செய்து, இளைஞரின் உயிரை மீட்டார். பிறகு அவர், போலீசாருடன் இணைந்து முதலில் விர்க் ஹாஸ்பிட்டல், பின்னர் கல்பனா சாவ்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவர்கள் உறுதியாக கூறியதாவது, “அந்த நிமிடங்களில் CPR கொடுக்கப்படவில்லை என்றால், அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உறுதி.” ஒரு வருடமாக மருத்துவமனையில் பணியாற்றும் அங்கிதா மான், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவுக்குப் பின்னர், கர்ணால் நகரமெங்கும் ‘மருத்துவ நாயகி’ என பாராட்டப்பட்டுள்ளார்.