பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் பைஜ்நாத்பூர் காவல் நிலைய எல்லையில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், தனது காதலனுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார் என கூறப்படுகிறது. இது கிராமத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில், அந்தப் பெண் தனது காதலனுடன் ஆட்சேபனைக்குரிய நிலையில் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த காட்சிகளை கண்ட கிராம மக்கள் இருவரையும் வெட்கம் இல்லாமல் நடந்து கொண்டதாக கடுமையாக தாக்கினர். மக்களின் கோபம் கொந்தளித்த நிலையில், சம்பவம் பெரிய பரபரப்பாக மாறியது.

இதையடுத்து, அந்த பெண்ணின் கணவர், மனைவியின் செயலால் ஏற்பட்ட சமூக அவமானத்தை கருத்தில் கொண்டு, கண்ணீருடன் ஒரு அதிரடி முடிவெடுத்தார். பலரின் முன்னிலையில், மனைவியின் சிந்தூரத்தை தண்ணீரில் கழுவினார். பின்னர், அவரது மனைவியை, காதலனுக்கு கல்யாணம் செய்து வைத்தார். கிராமத்தின் பெரியோர்களும், பொதுமக்களும் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கிராமப்புற சமூகத்தில் உறவுகள், மரியாதை, ஒழுக்கம் குறித்த புதிய கேள்விகளை எழுப்பும் வகையில் இந்த சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள், பாரம்பரியக் குடும்ப அமைப்புகள் மீது சிக்கலான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.