
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களின் போது பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூலை 26 அதாவது நாளை முதல் ஜூலை 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை திருவண்ணாமலை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு 260 பேருந்துகளும், ஜூலை 27ஆம் தேதி 290 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பெங்களூரு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது.