தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் ஜனநாயகன் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார்.

நடிகர் விஜய் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் இன்று பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கு அரசியல் கட்சி தலைவர் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

நாளைய தீர்ப்பு” – இல் ஆரம்பித்து “அழகிய‌ தமிழ் மகனாக” வலம் வந்து “திருப்பாச்சி”-இல் தங்கை பாசத்தையும் “சிவகாசி” இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து “துப்பாக்கி” ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி “வாரிசு” அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து “சுறா”வாக நீந்தி “கில்லி” யாக வெற்றி கண்ட “தமிழன்” “ஜன நாயகன்” தம்பி திரு.விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

“புதிய கீதை” வழியில்

தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.