
சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. அதாவது ஒரு ஜாக்குவார் நீர் நிலைக்கு அருகே தண்ணீர் குடிப்பதற்காக செல்கிறது. அப்போது அங்கிருந்த ஒரு முதலை ஒன்று தன்னுடைய இறை என நினைத்து அந்த ஜாக்குவாரை வேட்டையாட முயற்சித்தது. ஆனால் ஜாக்குவார் அந்த முதலையை வீழ்த்தியது. ஜாக்குவாரை தனக்கு இறையாக்க நினைத்த முதலையே கடைசியில் அதற்கு இறையாக மாறியது.
மேலும் ஜாக்குவார் மற்றும் முதலை சண்டை போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பொதுவாக பதுங்கி இருந்து தந்திரமாக இறையை வேட்டையாடும் முதலை தற்போது ஜாகுவாரிடம் தோற்றுப்போனது ஆச்சரியமாக பார்க்கப்படும் நிலையில் இந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram