
வாடகைத்தாய் மூலமாக தாயான பெண்ணுக்கும் பேறுக்கால விடுப்பு எடுக்கும் உரிமை உள்ளது என்று ஒடிசா ஹை கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று தாயான நிதித்துறை அதிகாரிக்கு ஊதியத்துடன் கூடிய 180 நாட்கள் விடுப்பு மறுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுவை விசாரித்த ஹைகோர்ட், எப்படி தாயானார் என்பது முக்கியமில்லை குழந்தையை பராமரிக்க விடுப்பு அவசியம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இனி வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டாலும் பேறு கால விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.