வருமானவரித்துறை எனர் சோதனைகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என்று அமைச்சர் எவ.வேலு கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்களவைத் தேர்தலை மையப்படுத்தி திமுகவினரை அச்சுறுத்த வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. நான் முறையாக வருமான வரி செலுத்துபவன். எனக்கும் அறக்கட்டளைக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய வீட்டிலும் என்னுடைய இரண்டு மகன்கள் அது வீட்டிலும் இருந்து வருமான வரித்துறையினர் ஒரு காசை கூட எடுத்துச் செல்லவில்லை. இந்த சோதனைகளுக்கு நான் அஞ்ச மாட்டேன் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.