வேலை நேரம் முடிந்த பின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை உண்டு என்ற புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட உள்ளது.

பல தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு அலுவலகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வேலையில்லாத நேரத்தில் அமைதியாக பொழுதை கழிக்கவோ குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கவோ முடிவதில்லை.

இந்தக் குறையை போக்கும் வகையிலும் தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையிலும் ஃபிராண்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளன.

அதாவது வேலை நேரம் முடிந்த பின் நிறுவனம் தொழிலாளர்களை தொடர்பு கொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமையை இந்த சட்டம் வழங்குகிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் இந்த புதிய சட்ட திருத்தம் ஓரிரு நாளில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.