வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன்(39) கடந்த 2011-ம் ஆண்டு  பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவர் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மிரட்டல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் வடகொரியாவின் அரசியல் சூழல் குறித்து தென்கொரியாவின் உளவு நிறுவனம் கூறியதாவது, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பொறுப்பில் இருந்து விலக போவதாக கூறினர்.

மேலும் அவரின் மகளான  ஜூ ஏ (12) என்பவரை அடுத்த அதிபராக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினர். இதனால் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களுக்கு தன் மகளையும் அழைத்துச் செல்கிறார். இதனால் வடகொரியா அதிபர் ஜிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக அவரது மகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.