வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த ‌காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் செப்டம்பர் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இதைத்தொடர்ந்து அடுத்த 3 நாட்களில் மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு ஒடிசா பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த மழை வருகிற 12-ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.