
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் அருகே கூந்தலூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான லட்சுமி நாராயண பெருமாள் வேணுகோபால சுவாமி கோவில் மற்றும் ஆற்றங்கரை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோவில்களில் நேற்று குடமுழக்கு நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 17-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து கடங்கள் புறப்பாடகி கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் செயல் அலுவலர் கங்காதரன் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.