
தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்பில் சென்னை மக்கள் தற்போது வரை முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகிறார்கள். பல இடங்களிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளதாகவும் வெள்ளத்தால் சிரமத்திற்கு உள்ளான 30 லட்சம் குடி மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய், சேதமடைந்த குடிசைகளுக்கு 8000 மற்றும் பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்ததற்கு நிவாரணமாக 37 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரேஷன் கார்டு மூலமாக நிவாரணத் தொகை வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு எப்படி வழங்கப்படும் என கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து ரேஷன் கார்டில் ஒருவர் பெயர் இருந்தாலே அவர்களுக்கு வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.