தமிழகத்தில் வெள்ள நிவாரணம் பெறுவதற்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ரேஷன் கடைகளில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கணக்கு விவரம் மற்றும் வசிக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து தர வேண்டும். ரேஷன் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.